துபாய்-மும்பை இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்

துபாய்-மும்பை இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்

துபாயிலிருந்து மும்பை சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானம், சரக்கு அறையில் புகை கண்டறியப்பட்டதால் ராஜ்கோட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர். விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும், பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் விமான நிலைய இயக்குநர் திகந்த போரா தெரிவித்தார். விமானம் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

Source: news18.com

Read the live feed on ZapIndies