2036-ஆம் ஆண்டுக்குள் மனிதர்கள் ஏஐ-யின் கட்டுப்பாட்டை முழுமையாக இழப்பார்கள் என்று எலான் மஸ்க் எச்சரித்துள்ளார். ரோபோக்கள் மற்றும் ஏஐ அமைப்புகள் உலகை வழிநடத்தும் நிலைக்கு உயரும் எனவும், மனிதகுலம் அழிய 10-20% வாய்ப்பு உள்ளதாகவும் ஒரு பாட்காஸ்டில் தெரிவித்தார். மேலும், 5 ஆண்டுகளில் ஏஐ மனித கூட்டறிவை விஞ்சும் எனவும், மனிதர் மட்டும் செய்ய முடிந்த வேலை எதுவும் இருக்காது எனவும் கூறினார். ஆந்த்ரோபிக், ஓபன்ஏஐ போன்ற நிறுவனங்களும் ஏஐ அமைப்புகள் தங்களைப்போல் சக்திவாய்ந்த மாடல்களை உருவாக்கும் ஆபத்தை சுட்டியுள்ளன.
2036க்குள் மனிதர்களின் கட்டுப்பாட்டை ஏஐ இழக்கும்: எலான் மஸ்க்
Source: NewsBytes Tamil
Read the live feed on ZapIndies