கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் நடந்த மிகப்பெரிய போதைப்பொருள் சோதனையில் 13 இந்திய வம்சாவளியினர் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர். ஒன்டாரியோ மாகாண காவல்துறை தலைமையில் நடந்த 'புராஜெக்ட் பே' நடவடிக்கையில் 1.7 டன் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.830 கோடி. குற்றவாளிகள் வணிக லாரிகளில் அமெரிக்காவிலிருந்து கனடாவுக்கு போதைப்பொருட்களை கடத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சோதனையில் 973 கிலோ கோகைன், 660 கிலோ மெத்தாம்பேட்டமைன் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
ஒன்டாரியோவில் மிகப்பெரிய போதைப்பொருள் சோதனை: 13 இந்தியர்கள் உள்பட 19 பேர் கைது
Source: news18.com
Read the live feed on ZapIndies