தமிழகத்திலிருந்து கனிம ஏற்றுமதிக்கு 3 மாத தடை

தமிழகத்திலிருந்து கனிம ஏற்றுமதிக்கு 3 மாத தடை

தமிழ்நாடு அரசு, அண்டை மாநிலங்களுக்கு எம்-சாண்ட், ஜல்லிக்கற்கள், கருங்கல் உள்ளிட்ட கனிமங்களை எடுத்துச் செல்ல மூன்று மாத இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மாநிலத்திற்குள் போதுமான விநியோகத்தை உறுதி செய்யவும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Source: ABP Nadu

Read the live feed on ZapIndies