திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 128 கி.மீ. தொலைவுக்கு ரூ.3,200 கோடியில் அமைக்கப்படும் 6 வழிச்சாலையில் போந்தவாக்கம்-சித்தூர் வரையிலான 99 கி.மீ. பணிகள் முடிந்துள்ளன. எனினும், ஊத்துக்கோட்டை அருகே மீதமுள்ள 29 கி.மீ. பணிகள் மண் பற்றாக்குறையால் மந்தகதியில் நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் அவதி தெரிவித்து, பணிகளை விரைவுபடுத்தக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊத்துக்கோட்டையில் 6 வழிச்சாலை பணிகள் மந்தகதி: போக்குவரத்து நெரிசலால் அவதி
Source: Dinakaran
Read the live feed on ZapIndies