தஞ்சாவூரில் அரிசி ஆலை மாற்றத்துக்கு எதிர்ப்பு

தஞ்சாவூரில் அரிசி ஆலை மாற்றத்துக்கு எதிர்ப்பு

தஞ்சாவூரில் நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகம் முன்பு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் ஊழியர்கள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுத் துறைக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், 48 மணி நேரத்தில் நெல் மூட்டைகளை இயக்க வேண்டும், பொய் புகாரில் நடவடிக்கை கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த நடவடிக்கைகள் நிர்வாக செயல்பாடுகளையும் ஊழியர்களின் பணிச்சூழலையும் பாதிக்கும் என தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

Source: ABP Nadu

Read the live feed on ZapIndies