ரஷ்யாவில் உக்ரைன் போரில் இறந்த வீரர்களின் இழப்பீட்டுத் தொகையை அபகரிக்க 'கருப்பு விதவைகள்' எனப்படும் பெண்கள் வீரர்களை திருமணம் செய்து மோசடி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போருக்கு அனுப்பப்படும் வீரர்களை போலியான காரணங்களுடன் திருமணம் செய்து, அவர்கள் இறந்த பிறகு அரசின் இழப்பீட்டுத் தொகையை பெற்று குடும்பத்தினரை புறக்கணிப்பதாக CNN அறிக்கை தெரிவிக்கிறது. 59 வயதான யூரியின் மகள் மரியா, தனது தந்தை போருக்கு அனுப்பப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு திருமணம் செய்ததாகவும், அந்த பெண்ணை தான் சந்தித்ததில்லை என்றும் கூறியுள்ளார்.
ரஷ்ய வீரர்களை திருமணம் செய்து இழப்பீடு பெறும் 'கருப்பு விதவைகள்'
Source: news18.com
Read the live feed on ZapIndies