ஈரோடு மாவட்டம் குப்புச்சிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மதிய உணவு இடைவேளையின் போது அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 11 வயது மாணவன் யோகேஷ் மின்சாரம் தாக்கி உயிரிழந்தான். இச்சம்பவத்தைக் கண்டித்து பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாகம் மற்றும் மின்சார வாரியத்தின் அலட்சியம் காரணம் எனக் கூறி போராட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி
Source: Samayam Tamil