நியூ மெக்சிகோ நீதிமன்றம், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு குழந்தைகளின் மனநலத்தைப் பாதித்ததற்காக 567 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4,750 கோடி) அபராதம் விதித்தது. குழந்தைகளை அடிமையாக்கும் வகையில் தளங்களை வடிவமைத்ததாகக் குற்றச்சாட்டு. அபராதத் தொகையில் பெரும்பகுதி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மனநல சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும். மேலும், பதின்ம வயதினருக்கான நேரக் கட்டுப்பாடு உள்ளிட்ட புதிய நடைமுறைகளையும் நிறுவனம் பின்பற்ற வேண்டும்.
மெட்டாவுக்கு ரூ.4,750 கோடி அபராதம்: குழந்தைகளின் மனநலத்தைப் பாதித்ததாக தீர்ப்பு
Source: Vikatan