தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் 5,000-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வன உரிமைச் சட்டத்தின் கீழ் பட்டா வழங்கக் கோரியும், வெளியேற்றத்தை எதிர்த்தும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பட்டா வழங்கும் பணிகள் முடியும் வரை யாரையும் வெளியேற்ற மாட்டோம் என ஆட்சியர் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
தேனியில் வனத்துறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு; போராட்டம் முடிவு
Source: Vikatan