தமிழ்நாடு அரசு, அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுவதை கட்டாயமாக்க நாளை சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டுவருகிறது. கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து பொது அமைப்புகளிலும் இது அமலாகும். நெல்லை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்ட சர்ச்சையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம்: நாளை சட்டப்பேரவையில் தீர்மானம்
Source: Polimer News