சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக வெளிநாட்டு கிரிக்கெட் நிபுணர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டீபன் ஃப்ளெமிங் விலகிய நிலையில், CEO காசி விஸ்வநாதன் மற்றும் இயக்குநர் ரூபா குருநாத், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியுடன் ஆலோசித்து முடிவு செய்வார்கள். பிரெண்டன் மெக்கல்லம், மைக்கேல் ஹஸ்ஸி, ஆல்பி மோர்கல் ஆகியோர் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.
CSK புதிய பயிற்சியாளராக வெளிநாட்டு நிபுணர் நியமனம் சாத்தியம்
Source: news18.com