பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இஸ்லாமாபாத் அரசு மருத்துவமனையில் நடந்த பரிசோதனைக்குப் பிறகு வெள்ளிக்கிழமை மீண்டும் ராவல்பிண்டி அடியாலா சிறைக்கு அனுப்பப்பட்டார். உச்சநீதிமன்ற உத்தரவின்படி அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பாதுகாப்பு பிரச்னைகளால் அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடந்தது. முழு உடல் தகுதியுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பரிசோதனைக்குப் பின் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார் இம்ரான் கான்
Source: Dinamani