குஜராத் அம்ரேலி மாவட்டம் ராஜுலாவில் கடன் சுமையால் மனம் உடைந்த கிஷோர் தனக் (40), 5 வயது மகள் ஹிமான்ஷியை மூச்சுத் திணறச் செய்து கொன்று, உடலை பிரிட்ஜில் வைத்துவிட்டு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். ரூ.7.25 லட்சம் வரவேண்டிய நிலையில் கடன் பிரச்சினை இருந்ததாக மூன்று தற்கொலைக் கடிதங்களில் குறிப்பிட்டுள்ளார். மகள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காகக் கொன்றதாக எழுதியுள்ளார். ராஜுலா காவல்துறை கொலை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறது.
குஜராத்தில் கடன் சுமையால் தந்தை மகளைக் கொன்று தற்கொலை
Source: Maalaimalar