கன்னியாகுமரி அருகே தனியார் விடுதியில் 51 வயது பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 31 வயது செல்வராஜ் கோயம்புத்தூரில் கைது செய்யப்பட்டார். நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் பழகிய இருவரும் விடுதிக்கு சென்ற நிலையில், பணத் தகராறில் பெண்ணை கழுத்தை நெரித்து தலையணையால் அமுக்கி கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். நகைகள் காணாமல் போனதால் விசாரணை தொடர்கிறது.
கன்னியாகுமரியில் பெண் கொலை: கோயம்புத்தூரில் சந்தேக நபர் கைது
Source: malaimurasu.com