காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள காஷ்மீர் பண்டிட் ஊழியர்களை குறிவைத்து அச்சுறுத்தல் கடிதம் வெளியாகியுள்ளது. லஷ்கர்-எ-தொய்பாவின் முன்னணி அமைப்பான யுனைடெட் லிபரேஷன் கவுன்சில் என்ற பெயரில் வெளியான இந்த கடிதத்தில், குறிப்பிட்ட நபர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் சிறப்பு வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட 6,000 பேரில் 5,724 பேர் பணியில் உள்ளனர்.
காஷ்மீர் பண்டிட் ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் கடிதம்
Source: news18.com