ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் ஈரானில் இருந்து ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகளை கண்டறிந்ததாக தெரிவித்துள்ளது. அவற்றில் ஒன்று நாட்டின் கடல் எல்லைக்கு வெளியேயும், மற்றொன்று கடல் எல்லைக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தை அடுத்து UAE பாதுகாப்பு அமைச்சகம் உயர்ந்த எச்சரிக்கை நிலையில் இருப்பதாகவும், அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது. ஈரான் இதுவரை பதிலளிக்கவில்லை.
ஈரான் ஏவிய 2 ஏவுகணைகளை ஐக்கிய அரபு அமீரகம் கண்டறிந்தது
Source: news18.com