தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியதாக எழும் விமர்சனங்களுக்கு மத்தியில், அவர் மீது சட்டப்பேரவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர திமுக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பேசிய விஜய், மக்களவைத் தொகுதிகளை 543-ஆக நிரந்தரமாக்க வேண்டும் என்ற முந்தைய நிலைப்பாட்டில் இருந்து மாறி, பிரதிநிதித்துவம் குறையக்கூடாது என்ற சட்டப்பூர்வ உத்தரவாதத்தை மட்டும் வலியுறுத்தியுள்ளார்.
தொகுதி மறுவரையறை: விஜய் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர திமுக திட்டம்
Source: Kumudam