டெல்லி பிரஸ் கிளப் வளாகத்தில் பிரதமர் மோடியை தெய்வமாக சித்தரித்து நடத்தப்பட்ட நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அங்கு மோடியின் படத்துக்கு ஆரத்தி எடுத்து 'ஜெய் ஜெய் மோடி, ஹர் ஹர் மோடி' என கோஷமிட்டனர். இதற்கு பிரஸ் கிளப் நிர்வாகம் தாங்கள் நிகழ்வை நடத்தவில்லை என்றும், வாடகை ஒப்பந்தத்தை மீறியதால் தலையிட்டு நிறுத்தியதாகவும் தெரிவித்தது.
மோடி சாலிசா நிகழ்வு பிரஸ் கிளப்பில் சர்ச்சை
Source: news18.com