இடுக்கி மாவட்டத்தில் இரண்டு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் தோட்டத் தொழிலாளர்கள் இருவர் மற்றும் சென்னையைச் சேர்ந்த சுற்றுலாப் பெண் ஒருவர் என மூன்று பேர் உயிரிழந்தனர். மற்றொருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மலப்புரம் மாவட்டத்தில் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் இருவர் உயிரிழந்தனர்; நான்கு பேர் மாயமாகியுள்ளனர். கேரளாவில் வரும் 24ஆம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கேரளாவில் நிலச்சரிவு: மூன்று பேர் பலி
Source: OneIndia Tamil