மியான்மரில் புத்த மடாலயம் மீது ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 14 பொதுமக்கள் உயிரிழந்தனர், 20 பேர் காயமடைந்தனர். தியானப் பயிற்சியில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்த போது இத்தாக்குதல் நடந்தது. ஐ.நா விசாரணை அமைப்பு இதை திட்டமிட்ட தாக்குதல் என குற்றம் சாட்டியுள்ளது.
மியான்மரில் புத்த மடாலயம் மீது வான்வழித் தாக்குதல்: 14 பேர் பலி
Source: Maalaimalar