வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், செப். 22 ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுபெற்று, வடக்கு ஆந்திரம் - தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாள்கள் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
வடக்கு அந்தமான் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது
Source: Maalaimalar