சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் குறித்த இரண்டு நாள் சர்வதேச மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார். தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஏற்பாடு செய்துள்ள இம்மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள், நிபுணர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர். கொள்கை உருவாக்கம், செயல்படுத்தல் மற்றும் அமலாக்கத்தில் உள்ள இடைவெளிகளைக் கண்டறிவதுடன், காலநிலை நீதி மற்றும் சமத்துவம் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் குறித்த சர்வதேச மாநாட்டை மோடி தொடங்கி வைத்தார்
Source: malaimurasu.com